Showing posts with label
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள்.
Show all posts
Showing posts with label
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள்.
Show all posts
Ingredients:
- மீந்த சப்பாத்தி - 5
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- காரட் 2
- எண்ணெய் - 3 + 3 தேக்கரண்டி
- பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
- உப்பு - தேவையான அளவு.
- கரம் மசாலா - 1 /2 டீ ஸ்பூன்
Method:
- வெங்காயம், பச்சைமிளகாய், காரட் , பீன்ஸ் , குடமிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
- சப்பாத்தியை, ரோல் செய்து, நீள வாக்கில் மெல்லிய நுாடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு , நறுக்கி வைத்துள்ள , நூடுல்ஸ் போல நறுக்கின சப்பாத்திகளை பொறித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
- மீண்டும் அதே வாணலியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- தேவையானால் இன்னும் எண்ணெய் விட்டுக்கொள்ளவும்.
- உப்பு மிளகாய்ப்பொடி போடவும்.
- இந்த கலவையில், நறுக்கி, வறுத்த சப்பாத்தியை போடவும்.
- தீயை மிதமாக்கி மேலாக கிளறவும்.
- கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- சுவைமிக்க, 'சப்பாத்தி நுாடுல்ஸ்' தயார்.
Ingredients:
- 4-5 ஸ்லைஸ் பழைய , மீந்த பிரட்
- 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
- 1/2கப் பொடியாக நறுக்கிய வேகவைத்த உருளைக்கிழங்கு
- 1 /4 கப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
- 1/2 கப் ஓமப்பொடி
- புளி சட்னி கொஞ்சம்
- புதினா + கொத்துமல்லி சட்னி கொஞ்சம்
- 2 ஸ்பூன் நெய்
- உப்பு
Method:
- ப்ரெட் ஐ துண்டங்களாக நறுக்கவும்.
- வறட்டு வாணலி இல் கருகாமல் நல்லா 'கர கர' பாக வறுக்கவும் .
- இப்போ , நெய் விட்டு வறுக்கவும்.
- எல்லாம் 'ஒத்தார்' போல வறுபட்டதும் , ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
- இப்போது எவ்வளவு பேர் சாப்பிடணுமோ அவ்வளவு கப் கள் எடுத்துக்கொள்ளவும்.
- அதில் மேலே சொன்ன ellavattraiyum கொஞ்சம் கொஞ்சம் போடவும்.
- சட்னிகளை விடவும்.............உப்பு கொத்துமல்லி துவி உடனே சாப்பிடக் கொடுக்கவும் .
- ரொம்ப சுவையான ' பேல்' பழைய பிரட் லிருந்து ரெடி.
Notes:
- சட்னி வேண்டாதவர்கள்....டொமாடோ சாஸ், சோயா சாஸ் போட்டு சாப்பிடலாம்.
Ingredients:
- மீந்த இட்லி மாவு – ஒரு கப்
- நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி - கொஞ்சம்
- பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க
- உப்பு – தேவையான அளவு.
Method:
- இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
- அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
- வெந்ததும் திருப்பி விடவும்.
- நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
- இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
- எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா.
- எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம்.
Ingredients:
- மீந்த டால் 2 கிண்ணம்
- வெங்காயம் நறுக்கியது 1 (optional)
- உப்பு காரம் தேவையான அளவு
- கொத்துமல்லி சிறிது
- கோதுமை மாவு
Method:
- எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி பண்ணவும் .
- குறிப்பு: மீந்த கீரையையும் இப்படி செய்யாலாம்...கீரைக்கு கூட்டையும் இப்படி செய்யலாம்.
Ingredients:
- சாதம் 1 கப்
- கோதுமை மாவு 2 கப்
- கொத்துமல்லி தழை 2 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கவும் )
- பச்சை மிளகாய் 4 - 6 (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும் )
- பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கவும் )
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
- ஆம்சூர் 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/2 spoon
- உப்பு
- எண்ணை மற்றும் நெய் கலந்தது சப்பாத்தி செய்ய
Method:
- கோதுமை மாவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
- ஒரு பேசினில் போடவும்.
- பிறகு கோதுமை மாவை போட்டு உப்பு போட்டு தேவையானால் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- பிறகு எப்பவும் போல சப்பாத்திகள் செய்யவும்.
- சுவையான சாதம் மசாலா சப்பாத்தி தயார்.
Ingredients:
- மீந்த சாதம் 1 கப்
- சர்க்கரை 1 1/2 கப்
- முந்திரி 10 -12 தேவையானால்
- பால் 1 கப்
- ஏலப்பொடி அல்லது பச்சை கற்பூரம்
- திராக்ஷை 10 - 12
- கொஞ்சம் நெய்
Method:
- சாதம், சர்க்கரை, பால் மற்றும் முந்திரியை மிசில போட்டு அடிக்கவும்.
- வாணலி இல் நெய் விட்டு திராக்ஷை போட்டு பொறிக்கவும்.
- அரைத்ததை அதில் கொட்டவும்.
- ஒரு கொதி வந்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
- சுவையான பாயசம் ரெடி.
- ரொம்ப டேஸ்டி யாக இருக்கும் இது .
Notes:
- இதைப்போலவே புதிய சாதத்திலும் செய்யலாம், தேவையானால் குங்குமப்பூ போடலாம்.
Ingredients:
- மீந்த சாதம் 1 கப்
- கடலை மாவு 1/2 கப்
- பச்சை மிளகாய் 4 - 5
- தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
- வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
- உப்பு
- பொறிக்க எண்ணை
Method:
- சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
- அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
- சாதம் பக்கோடா ரெடி .
- நல்ல கரகரப்பாக வரும்.
- மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துவிடலாம்.
Notes:
- முதலில் சாதம். இது தான் எப்பவும மீந்து விடும். முன்பெல்லாம் எல்லோரும் காலை இல் பழயது சாப்பிடுவார்கள் ....இப்போ ?????????? எனவே அதை என்ன செய்வது என்பது கேள்வி. அதற்கு பதில் தான் இவை. மீந்த சாதத்தில் நிறைய items புதுசு புதுசாக பண்ணலாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.