தேவையானவை :
உளுந்தும் பருப்பு - 2 cup
கோதுமை மாவு /மைதா - 3 cup
சீரகம் - 4 டீ ஸ்பூன்
ஏலக்காய்: 10
கிராம்பு: 5 -6
பட்டை: 1 சிறிய துண்டு
மிளகாய் வற்றல்: 10 - 12
உப்பு
எண்ணெய் - பொறிப்பதற்கு
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
உளுந்தும் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை அதில் போட்டு, நன்றாக வதக்கவும்.
பிறகு நைஸாக அரைத்த உளுந்தையும் அதில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
இதை பூரணம் என்று சொல்வோம்.
கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணைவிட்டு மாவை நன்கு கலக்கவும்.
பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
ஒவ்வோர் உருண்டைகளுக்குள்ளும் பூரணத்தைச் சிறிது வைத்து, பூரி போல இட்டு அல்லது கையால் வடை தட்டுவது போல தட்டி,, காய்ந்த எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு பொரிந்தவுடன் எடுக்கவும்.
குறிப்பு : இது 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். ரொம்ப நல்லா இருக்கும். இதனுடன் இனிப்பு மற்றும் கார சட்டினி நல்லா இருக்கும். இனிப்பு மற்றும் கார சட்னி செய்முறையை நான் இதே திரி இல் போட்டிருக்கேன் பாருங்கள்
No comments:
Post a Comment